உள்நாடு

சசி தாஹூர் – அமைச்சர் அலி சப்ரி சந்திப்பு

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசி தாஹூர் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு வெளிவிவகார அமைச்சில் நேற்று இடம்பெற்றது.

இச் சந்திப்பில், இந்தியா – இலங்கை உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்பட்டதுடன், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளில் பயனுள்ள திட்டங்களை அமுல்படுத்தல் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், இரு நாடுகளின் எதிர்கால நன்மைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான விடயங்கள் குறித்தும் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *