உள்நாடு

பாதாள உலகக் குழுக்களை ஒடுக்க புதிய திட்டம்

எதிர்வரும் 6 மாதங்களில் ஆயுதமேந்திய பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை முற்றாக நிறுத்துவதற்கு பொலிஸார் திட்டமிட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பாதாள உலக செயற்பாடுகள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்படும் குற்றவாளிகளால் நடத்தப்படுவது தற்போது தெரியவந்துள்ளது என்றார்.

உங்கள் பிரதேசத்தில் பொதுமக்களையும் வர்த்தகர்களையும் அச்சுறுத்தும் நபர்கள் இருப்பின் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *