Uncategorizedஉள்நாடு

எம்.பிக்களுக்கான காப்புறுதித் தொகை அதிகரிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அடுத்த வருடம் முதல் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான காப்புறுதித் திட்டம் அமுல்படுத்தப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

வருடாந்த வரவு – செலவுத் திட்டத்தின் ஒதுக்கீடுகளுடன் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் இந்த திட்டத்தைச் செயற்படுத்துகிறது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் வயது வரம்பில் ஏற்பட்ட மாற்றம்இ சமூக பாதுகாப்பு வரி திருத்தங்கள் காரணமாக வரித் தொகையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அறவிடப்படும் மதிப்பில் ஏற்பட்ட மாற்றம் என்பன காரணமாகவே இவ்வாறு அதிகரிக்கப்படுவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *