உள்நாடு

2023 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று

நாடளாவிய ரீதியில் இன்று (15) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது.

இம்முறை 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு 337,956 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தப் பரீட்சை 2888 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதாகவும், அதற்கான சகல
ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர
தெரிவித்துள்ளார்.

தரம் 05 புலமைப்பரிசி ல் பரீட்சையில் பங்குகொள்ளும் அனைத்து பரீட்சார்த்திகளும் காலை 09
மணிக்குள் பரீட்சை மண்டபங்களுக்கு வருகை தருமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

பரீட்சையில் மாணவர்கள் முதலில் இரண்டாவது வினாத்தாளுக்கு விடையளிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வினாப்பத்திரம் ii சுருக்க விடைகள் வழங்கும் 60 வினாக்கள், மு. ப. 9.30 – 10:45 மணி வரையும் (ஒரு மணி நேரம் 15 நிமிடம்) வினாப்பத்திரம் i மூன்று பிரிவுகள் கொண்ட 40 பல் தேர்வு வினாக்கள், 11.15- 12. 15 வரையும் (ஒரு மணி நேரம்) நடத்தப்படுமென பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள அனைத்து பரீட்சார்த்திகளும் அருகிலுள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக, பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் லசிக சமரகோன் தெரிவித்தார்.

இதேவேளை,  வெள்ளத்தினா ல் பாதிக்கப்பட்ட மாத்தறை, அக்குரஸ்ஸ, முலட்டியன ஆகிய கல்வி
வலயங்களில் பரீட்சார்த்திகள் பிரதேச செயலகங்கள் ஊடாக பரீட்சைக்குத் தோற்றுவதற்கான
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்விச் செயலாளர் ரஞ்சித் யாப்பா குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளுக்கு மாணவர்களைத்‌ தேர்ந்தெடுப்பதற்கும்‌ உதவிப்பணம்‌ வழங்குவதற்குமாக இடம்பெறும் தரம்‌ 5 புலமைப்பரிசில்‌ பரீட்சைக்கு, அரசாங்கப்‌ பாடசாலையொன்றில்‌ அல்லது அரசாங்கத்தினால்‌ அங்கீகரிக்கப்பட்ட பாடசாலையொன்றில்‌ தரம்‌ 5 இல்‌ கல்வி பயிலும்‌ மாணவர்கள்‌ மாத்திரமே தோற்ற முடியும்‌.

2024 ஜனவரி 31 ஆம்‌ திகதியன்று 11 வயதுக்குக்‌ குறைந்த 10 அல்லது 10 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம்‌ உடைய மாணவர்களுக்கு மாத்திரமே உதவிப்பணம்‌ வழங்கப்படும்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *