உள்நாடு

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவிற்கு சேவை நீடிப்பு

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் பதவிக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (13) முதல் அமுலுக்கு வரும் வகையில், மூன்று வாரங்களுக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் சி.டி.விக்ரமரத்னவின் பொலிஸ் மா அதிபர் பதவிக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் தலா 03 மாதங்கள் என்ற அடிப்படையில் இவரின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *