பாத யாத்திரீகர்களுக்கு இயற்கையைச் சூழலைப் பேணிப் பாதுகாக்கும் வகையில் கழிவுக் குப்பைகளை கையாளும் விழிப்புணர்வுப் பிரச்சாரம்..!
பாத யாத்திரீகர்கள் இயற்கைச் சூழலைப் பேணிப் பாதுகாத்து இயற்கைக்குக் கேடு விளைவிக்காத வண்ணம் கழிவுக் குப்பைகளை கையாளுமாறு மேற்கொண்ட பிரச்சாரம் வெற்றியளித்துள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு ஆயித்தியமலை சதா சகாய மாதா ஆலயத் திருவிழா நிகழ்வின்போது வவுணதீவு வழியாக பாத யாத்திரை மேற்கொண்ட ஆயிரக்கணக்கான பாத யாத்திரீகர்களிடம் இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாக மண்முனை மேற்கு வவுணதீவுப்பிரதேச இயற்கை ஆர்வலர்களான இளைஞர் அணியினர் தெரிவித்தனர்.
Read More