உள்நாடு

ஏப்ரல் முதல் மின் கட்டண அதிகரிப்பு..!

இலங்கை மின்சார சபையால் கோரப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம், அவர்கள் கோரிய சதவீதத்தை விடக் குறைந்த சதவீதத்தில் ஏப்ரல் 01ஆம் திகதி முதல் செயல்படுத்த அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகளைப் பரிசீலித்த பின்னர், 8% முதல் 12% வரையிலான வரம்பில் மின்சாரக் கட்டணங்களை உயர்த்த அனுமதி வழங்கப்படும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மின்சார சபை 13.5% கட்டணத் திருத்தத்தைக் கோரியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *