உள்நாடு

அதி வேகமாக பரவும் சிக்காடா வைரஸ்..!

உலகெங்கும் கோவிட் வைரஸின் புதிய உருமாற்றமான BA.3.2, தற்போது பேசுபொருளாகியுள்ளது. நீண்ட காலம் மறைந்திருந்து திடீரென வெளிப்பட்டதால், இதற்கு ‘சிக்காடா’ (Cicada) என்று பெயரிடப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட 23 நாடுகளில் பரவியுள்ளது. குறிப்பாக ஜெர்மனி, டென்மார்க் போன்ற நாடுகளில் 30 சதவீத பாதிப்புகளுக்கு இந்த வைரஸே காரணமாக உள்ளது.

இதன் ஸ்பைக் புரோட்டீனில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட மாற்றங்கள் உட்பட, ஒட்டுமொத்தமாக 75-க்கும் மேற்பட்ட மரபணு மாற்றங்களை (Mutations) இது கொண்டுள்ளது.

இது தற்போதுள்ள தடுப்பூசிகளின் வீரியத்தை ஓரளவிற்கு குறைக்கும் என அஞ்சப்பட்டாலும், வைரஸ் பெரிய அளவில் உயிர்ப்பலியை ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தொண்டை வலி, காய்ச்சல், இருமல் மற்றும் உடல் சோர்வு போன்ற சாதாரண அறிகுறிகளே தென்படுகின்றன.

இந்தியாவில் தற்போது பெரிய பாதிப்புகள் இல்லை என்றாலும், சர்வதேச பயணங்கள் மூலம் இது பரவ வாய்ப்புள்ளதால் மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தடுப்பூசி செலுத்திக்கொள்வது மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே இந்த ‘சிக்காடா’ வைரஸிடமிருந்து நம்மைப் பாதுகாக்கும் சிறந்த வழிமுறைகள் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *