உலகம்

மேலும் 10 நாட்களுக்கு ஈரானுக்கு எதிரான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது; அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

ஈரான் மின் உற்பத்தி நிலையங்கள், எரிசக்தி நிலையங்கள் மீதான இராணுவத் தாக்குதல் மேலும் 10 நாள்களுக்கு நிறுத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 27) வெளியிட்ட பதிவில், ‘ஈரானிய அரசின் வேண்டுகோளை ஏற்று, எரிசக்தி நிலையங்கள் அழிப்பு நடவடிக்கைகளை திங்கள்கிழமை, ஏப். 6, 2026, இரவு 8 மணி வரை நான் நிறுத்திக்கொள்கிறேன்.

பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது. போலியான ஊடகச் செய்திகள் மற்றும் பிறரின் பொய்யான தகவல்களுக்கு மத்தியில், பேச்சுவார்த்தை நல்லபடியாக நடைபெறுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் நாடுகளிடையே நடைபெற்றுவந்த போர், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த திங்கள்கிழமை (மார்ச் 23) அறிவித்த நிலையில், மேலும் 10 நாள்களுக்கு அந்த முடிவு இன்று நீட்டிக்கப்பட்டுள்ளது.

 அமெரிக்கா முன்வைத்த அமைதித் திட்டம் ‘ஒருதலைப்பட்சமானது மற்றும் நியாயமற்றது’ என்று கூறி, ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *