அமெரிக்க போர் நிறுத்தத்தை நிராகரித்த ஈரான்.

போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்காவின் 15 அம்ச திட்டத்தை மத்தியஸ்தர்கள் மூலம் ஈரான் பெற்றதாகவும், எனினும் பேச்சுவார்த்தைக்கான அமெரிக்காவின் அழைப்பை ஈரான் நிராகரித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் உதவியுடன் மத்தியஸ்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அசோசியேட் பிரஸ் செய்தி ஒன்று, போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்காவின் 15 அம்ச திட்டத்தை பாகிஸ்தான், ஈரானிடம் கொண்டு சேர்த்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்த இராஜதந்திர முயற்சிகளை ஈரான் ராணுவம் கிண்டல் செய்துள்ளது. ‘உங்கள் உள் மோதல்கள் உங்களுக்குள்ளேயே நீங்கள் பேரம் பேசும் நிலையை எட்டியுள்ளதா?’ என்று ஈரான் இராணுவம் மற்றும் துணை இராணுவப் புரட்சிகரக் காவலர் படை ஆகிய இரண்டுக்குமான மத்திய தலைமையகம் கேலி செய்துள்ளது.
இது தொடர்பாக அரசு தொலைக்காட்சியில் உரையாற்றிய மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் இப்ராஹிம் சோல்பகாரி, ‘‘முதல் நாளில் இருந்து எங்கள் முதல் மற்றும் கடைசி வார்த்தை ஒன்றாகவே இருந்து வருகிறது. அது அப்படியே தொடரும். எங்களைப் போன்றவர்கள் உங்களைப் போன்றவர்களுடன் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள். இப்போது மட்டுமல்ல; எப்போதும்’’ என தெரிவித்துள்ளார்.
