யுத்த தீப்பிழம்புகள் அணைந்து அமைதியின் ஒளி உதயமாகட்டும்; எதிர்கட்சித் தலைவரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி
உலகெங்குமுள்ள முஸ்லிம்கள் ரமழான் மாத நோன்பை நிறைவு செய்யும் இந்த தருணத்தில், இஸ்லாம் நமக்கு கற்றுத் தரும் மானுட தர்மங்களை இன்னும் ஆழமாக சிந்திப்பது அவசியமாகும். ஒரு முஸ்லிம் நிறைவேற்ற வேண்டிய ஐந்து கடமைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவையாவன: நம்பிக்கை, ஐவேளை தொழுகை, ரமழான் மாத நோன்பு, ஸகாத் அதாவது ஏழை வரி செலுத்துதல் மற்றும் ஹஜ் யாத்திரை ஆகியனவாகும். இந்த ஐந்து கடமைகளிலும் முஸ்லிம்களுக்கு சுட்டிக்காட்டப்படுவது, அமைதியும் நல்லிணக்கமும் நிறைந்த சமூகத்திற்கு வழிகாட்டும் ஒரு வாழ்க்கை முறையின் அவசியமாகும். ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் கடைப்பிடிக்கும் நோன்பு, அர்ப்பணிப்பு, பொறுமை மற்றும் ஆன்மீகத் தூய்மை பற்றிய பல பாடங்களை கற்றுத் தருகிறது.
இந்தத் தருணத்தில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் வாழும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தோன்றியுள்ள போர்ச் சூழலுக்கு தீர்வு காண்பதற்கான முக்கியமான வழி, இஸ்லாம் காட்டும் பொறுமை, கருணை, ஒற்றுமை மற்றும் மனிதநேயமே என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
பொறுமையற்ற தன்மையிலும் பொறுமை கொண்டும், வெறுப்பிலும் கருணை கொண்டும், பிளவிலும் ஒற்றுமையை கட்டியெழுப்பும் ஒரு செயல்திட்டத்தின் மூலம் இந்த நெருக்கடிக்கு தீர்வு காண முடியும். அதற்காக மேம்பட வேண்டியது மனிதநேயமே.
ஒரு மோதலை தீர்ப்பதற்கு வலிமை அல்லது சட்டம் மட்டும் போதாது. அதற்கு மக்களின் சிந்தனையை உறுதியான நல்வழியில் கொண்டுசெல்வது முக்கியமாகும். ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் காட்டுவது, தம் மனதிற்குள் கட்டியெழுப்பும் வலிமையே ஆகும். இந்த தருணத்தில் உண்மையான ரமழான் கொண்டாட்டமாக நாம் உணர்ந்துகொள்ள வேண்டியது அதுவே. அத்தகைய மனித சிந்தனைகள் மேலும் நல்ல, சமாதானமான மற்றும் சமூக நீதிக்கு அர்ப்பணிக்கப்படும் ஒரு தருணத்திற்கு உலகில் மாற்றம் நிகழட்டும் என்று நாம் இந்த நேரத்தில் பிரார்த்திப்போம்.
அத்தகைய சிந்தனைகள் உலக மக்களின் மனங்களில் ஒளிர்ந்தால், போரின் தீப்பொறிகள் அணைந்து, அமைதியின் விளக்குகள் உலகெங்கும் ஏற்றப்படுவதில் சந்தேகமேயில்லை.
உலக மக்கள் அனைவருக்கும் மற்றும் இலங்கையில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் இனிய ஈதுல் பித்ர் நோன்புப் பொருநாள் நல்வாழ்த்துகள்.
