ஈரான் மாலுமிகளின் உடல்களை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு
காலி மருத்துவமனையில் இரண்டு நடமாடும் குளிர்பதன அறைகளில் வைக்கப்பட்டுள்ள 84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு காலி பிரதம நீதவான் சமீர தொடங்கொட இன்று (11) காலை காலி மருத்துவமனையின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
காலி துறைமுக காவல்துறையினர் காலி பிரதம நீதவான் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
