உள்நாடு

டீசல் விலை அதிகரிப்பு; பேரூந்துக் கட்டணங்களில் மாற்றமில்லை

டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

நேற்று (09) நள்ளிரவு முதல் டீசல் விலை உயர்ந்த போதிலும், அது பேருந்து கட்டண திருத்தத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது என அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக தற்போதைய கட்டணங்களே அவ்வாறே நடைமுறையில் இருக்கும் என்றும் கலாநிதி நிலான் மிரண்டா மேலும் குறிப்பிட்டுள்ளார். 

நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் ஓட்டோ டீசல் 22 ரூபாவினாலும், ஒரு லீற்றர் லங்கா சுப்பர் டீசல் 24 ரூபாவினாலும் அதிகரிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *