வன விலங்குத் துறை வரலாற்றில் முதற்தடவையாக அலுவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு
வனவிலங்கு வரலாற்றில் முதல் முறையாக வனவிலங்கு அலுவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு கிரித்தலை தேசிய வனவிலங்கு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (21) நடைபெற்றது.
வனவிலங்கு பாதுகாப்புத் துறையை மீண்டும் கட்டியெழுப்புதல், சுற்றுச் சூழலை பாதுகாத்தல், வனவிலங்கு குற்றங்களை தடுப்பது மற்றும் வனவிலங்கு அதிகாரிகளின் தன்னம்பிக்கையை வளப்படுத்துவதற்கான புதிய அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.
வனவிலங்கு துறையில் அவர்களின் சேவை மற்றும் கல்வி தகுதிகளை அங்கீகரிக்கும் விதமாக 30 வனவிலங்கு கள் அதிகாரிகளுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த பதக்கங்கள் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
வனவிலங்கு அதிகாரிகளின் அர்ப்பணிப்பு கள நிபுணத்துவம், தத்துவார்த்த பயிற்சி, கள செயல்திறன், ஒழுக்கம் மற்றும் சிறப்பு நடவடிக்கைகளுக்கான அர்ப்பணிப்பு ஆகியவைகளை கருத்தில் கொண்டு எதிர் காலத்தில் இது போன்ற பதக்கங்கள் வழங்கப்படும்.
தற்போதைய பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க வின் தலைமையில் நடைபெற்ற முதல் மதிப்பீடு இதுவாகும். மேலும் இது வனவிலங்கு பாதுகாப்புத் துறையில் முதன் முதலில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி வனவிலங்கு பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க கிரித்தலை தேசிய வனவிலங்கு மற்றும் பயிற்சி மையத்தின் உதவி பணிப்பாளர் டபிள்யூ.டி.எம்.கே. விக்ரமசிங்க உட்பட பலரும் கலந்து கொண்டனர்.






(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)
