களனி பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் 50 ஆவது இப்தார் நிகழ்வு
களனி பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸின் 50ஆவது ஆண்டான நேற்று 24 ஆம் திகதி இப்தார் நிகழ்வுகள் களனி பல்கலைக்கழகத்தின் பிரதான கூட்ட மண்டபத்தில் இஸ்லாமிய மாணவர்கள் சங்கத்தின் தலைவர் லுக்மான் சுகைப் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டம் மண்டபம் முஸ்லிம்களின் கலாச்சாரத்துக்கு ஏற்ப அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் ஏனைய மாணவர்கள் இணைந்து கொண்டு முஸ்லிம் மாணவிகளுடன் படங்கள் எடுத்துக் கொள்வதையும் சிங்கள மாணவர்கள் உதவி ஒத்தாசை புரிவதனையும் காணக்கூடியதாக இருந்தது.
இங்கு நோன்புக் கஞ்சி, ஈத்தம் பழம் , சம்சா, பெட்டீஸ், பழங்கள், வட்டிலப்பம் ரசித்து உண்டு மகிழ்வதையும். அத்தூர் வாசனைப் போத்தல் அன்பளிப்பாக பெற்றுக் கொள்வதனையும், இம் மண்டபத்தில் குர்ஆன் , பாங்கு, ஹசீதா, ஸலாவத்து அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவரும், முஸ்லிம் மஜ்லிஸின் அப்போது (1974) ஸ்தாபகத் தலைவராக இருந்த என்.எம். அமீன் பல்கழைக்கழக பதிவில் அவர் பெயரைக் கண்டு பிடித்து பிரதம அதிதியாக அழைத்திருந்தனர்.
அத்துடன் இப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரும், உபவேந்தருமான நிலந்தி டி சில்வா, மற்றும் பேராசிரியர் எம். ஜே.எம். ராசிக் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.
உபவேந்தர் உரையா்ற்றுகையில் இப் பல்கலைக்கழகம் 150 வருடங்கள் கொண்டாடியது. அப்போது 50 வருடங்கள் முன் ஸ்தபிக்கப்பட்ட முஸ்லிம் மஜ்லிஸ் மலரினைக் கண்டேன் அதில் அமீன் அவர்கள் தவைவராக இருந்துள்ளதையும் தெரிவித்தார்.
பின்னர் இங்கு உரையாற்றிய அமீன், நான் அன்று வெளியிட்ட முதலாவது முஸ்லிம் மஜ்லிஸின் மலரின் அட்டைப்படம் சொல்லும் கதை பண்டைய காலத்து சிங்கள மன்னன் ராஜசிங்கனை கொலை செய்வதற்காக போர்த்துக்கேயர்கள் துரத்தி வந்த போது, அப்போது அவ்விடத்தில் மறைந்திருந்தார். ஆனால் இவ்விடத்தில் இருந்த ஓர் முஸ்லிம் பெண்ணிடம் விசாரித்தார்கள். இவ்வழியில் மன்னர் வந்தாரா? என அதற்கு அந்த முஸ்லிம் பெண் எந்த பதிலும் கூறாது அமைதியாக இருந்தார். பின்னர் அவர்கள் அந்தப் பெண்ணை கொலை செய்தார்கள்.
பின்னர் தப்பிய மன்னர் ”மரக்கலையே என பெயர் வந்ததை இன்றும் மையங்களையில் பண்டுஸ் எனும் ஓர் பிரதேசம் தற்பொழுதும் உள்ளதாக சம்பவத்தினை உரையாற்றினார்.
பின்னர் இவைகள் பற்றி காலம்சென்ற கலாநிதி சுக்ரி நூல்வடிவில் இவ் வரலாறுகளை எழுதியுள்ளதாகவும் என். எம். அமீன் குறிப்பிட்டிருந்தார்.
இன்றைய இப்தார் நிகழ்வில் அப் பல்கலைக்கழகத்தின் ஏனைய பீடங்களில் பயிலும் தமிழ், சிங்கள, கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் முஸ்லிம் மாணவர்கள் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு பல்வேறு பீடங்களில் பயிலுகின்றனர். ஏனைய பல்கலைக்கழகங்களில் முஸ்லிம் மஜ்லிஸ், பிரதிநிதிகள், களனி பல்கலைக்கழகத்தின் பௌத்த பீடம், தேரர்கள், கிறிஸ்தவ அமைப்பு , தமிழ் மன்றம் போன்ற மாணவர்களும் அழைக்கப்பட்டு இவ் இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அத்துடன் அஷ்ஷேக் அம்கர் அமர்ரு டீன் சிங்கள மொழி மூலம் அழகாக நோன்பு பற்றியும், முஸ்லிம்களின் நோன்பு உணர்த்தும் பாடம், இந்த பல்கலைக்கழகத்தின் தேசிய ஐக்கியம், ஒற்றுமை கட்டியெழுப்புவது தொடர்பிலும் உரையாற்றினார்.
மேலும் இங்குள்ள முஸ்லிம் மாணவிகள் நமது கலாச்சாரத்திற்கு ஏற்ற உடை அணிந்து கல்வி பயில்வதுடன் இந்நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்தில் தொழுகையும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.


(அஷ்ரப் ஏ சமத்)
