இந்தியா பயணமாகவுள்ள ஜனாதிபதி
இந்த மாத இறுதியில் இந்தியாவின் புதுடில்லியில் நடைபெறவுள்ள AI தாக்க உச்சி மாநாட்டில் (AI Impact Summit) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்து கொள்ளவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மகிஷினி கொலோன்னே குறித்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
