அபிவிருத்தி உத்தியோகத்தர்களை சந்தித்த றவூப் ஹக்கீம்..!
கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டத்தின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் வாசித் ஆகியோர் நேரில் சென்று அவர்களின் பிரச்சினைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தனர்.
(கே எ ஹமீட்)




