அநுராதபுரம் ஊடகவியலாளர் சங்கத்தின் சமூக நலப் பணிகள்
அனுராதபுரம் மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நலன்புரிச் செயல்த்திட்டத்தின் கீழ் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் டப்ளியூ. பைஷலின் புதல்வருக்கான கல்வி மேம்பாட்டு உதவித் தொகை வழங்கும் நிகழ்வும் , மனுசத் தெரண (முதலில் மனித நேயம்) அனுசரணையுடன் இடம்பெற்றது.
அத்துடன் அனுராதபுரம் மாவட்ட ஊடகவியலாளர்களின் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்காக கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் சங்கத்தின் தலைவர் அப்துல் ஹமீட் தம்சீர் தலைமையில் அனுராதபுரம் பொதுச் சந்தை பகுதியில் அமைந்துள்ள மக்கள் கூட்ட மண்டபத்தில் (31) நடைபெற்ற போது பிடிக்கப்பட்ட படங்கள்.








(படம்:- எம்.ரீ. ஆரிப்- அநுராதபுரம் )
