பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்
பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ.நஸீல் அவர்களின் ஏற்பாட்டில் அபிவிருத்தி குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தலைமையில் இன்று (28) பொத்துவில் பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.அப்துல் வாசித், கே.கோடிஸ்வரன், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.எம்.முஷாரப்,, கணக்காளர்
எஸ்.எப்.சபானா, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.எம்.எம்.சப்ரி, உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், முப்படை அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.




(கே. எ. ஹமீட்)
