உள்நாடு

அரசின் புதிய செயற்றிட்டமான கல்வி கட்டமைப்புக் குழுவினை (Educational Structural Committe) அமைக்கும் நிகழ்வு

அரசின் புதிய செயற்றிட்டமான கல்வி கட்டமைப்புக் குழுவினை (Educational Structural Committe) அமைக்கும் முதல் கட்ட நிகழ்வு கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளில் நிலவும் பௌதீகவள குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றினை மேம்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது.

கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீமின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா கலந்து சிறப்பித்தார்.

இதன்போது கல்முனை வலயத்தின் பிரதிகல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரிய, அதிபர் சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *