தெற்கு கடற்பரப்பில் பெருந்தொகை போதைப் பொருட்களை கைப்பற்றிய கடற்படை
தெற்கு கடற்பரப்பில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு நெடுநாள் மீன்பிடிப் படகுகளும் 11 சந்தேகநபர்களும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.
இதன்போது ஒரு நெடுநாள் மீன்பிடிப் படகுடன் 5 நபர்களும், மற்றைய நெடுநாள் மீன்பிடிப் படகுடன் ஆறு சந்தேகநபர்களும் கடற்படையினரால் பொறுப்பேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் உள்ளதாக சந்தேகிக்கப்படும் பைகள், இரண்டு நெடுநாள் மீன்பிடிப் படகுகள் மற்றும் சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கரைக்கு கொண்டு வந்துகொண்டிருப்பதாக கடற்படை மேலும் குறிப்பிட்டுள்ளது.
