உள்நாடு

பொதுப் பாவனைக்காக திறக்கப்பட்ட அனுராதபுர பொதுச் சந்தை வாகன தரிப்பிடம்..!

அனுராதபுரம் நகர பொதுச் சந்தை வாகன தரிப்பிடம் வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தலைமையில் அனுராதபுரம் மாநகர மேயர் என்.கருணாரத்ன வின் பங்களிப்புடன் திறந்து வைக்கப்பட்டது.

அனுராதபுரம் தெற்கு  போக்குவரத்து மையத்தை மையமாக கொண்ட பொதுச் சந்தையில் இந்த வாகன நிறுத்துமிடம் திறக்கப்பட்டுள்ளது.

நீண்ட தூரம் பேருந்து அல்லது ரயிலில் பயணிக்கும் பயணிகள் தங்கள் வாகனங்களை இந்த வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி விட்டு அவர்கள் தங்கள் பயணத்திலிருந்து திரும்பும் வரை இந்த வாகன நிறுத்துமிடத்தில் பாதுகாப்பாக விட்டுச் செல்ல முடியும். மேலும் புதிய பேருந்து நிலையத்தைச் சூழ ஏராளமான வணிக இடங்கள் உள்ளன. அந்த வணிகர்களின் வாகனங்கள் அவர்களின் வணிக இடங்களுக்கு முன்னால் நிறுத்தப்பட்டன. இந்த வாகன நிறுத்துமிடம் திறக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் தங்கள் வாகனங்களை இந்த வாகன நிறுத்துமிடத்தில் பாதுகாப்பாக விட்டுச் செல்ல முடியும்.  இங்கு 60 க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்த வசதிகள் உள்ளன.இதற்கான பாதுகாப்பு திட்டத்தை அனுராதபுரம் தலைமையக பொலிசாருடன் இணைந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *