உள்நாடு

கல்விச் சீர்திருத்தத்துக்கான சகல நடவடிக்கைகளும் ஆரம்பம்; அமைச்சர் வசந்த சமரசிங்க

கல்வி சீர்திருத்தங்கள் வெறும் பாடத்திட்ட திருத்தம் மட்டுமல்ல. ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்தல் , கட்டிடங்களை கட்டுதல் , புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

   ” எதிர் காலம் நீயே , நாளை வெல்லக் கற்றுக்கொள் ” என்ற தலைப்பில் கல்வி சீர்திருத்தங்கள் குறித்த கலந்துரையாடல் (18) அனுராதபுரம் இளைஞர் நிலையத்தில் நடைபெற்ற போது அமைச்சர் வசந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு புதிய கல்வி சீர்திருத்த செயல் முறை குறித்து அனுராதபுரம் மக்களுக்கு விளக்கப்பட்ட கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,   புதிய கல்வி சீர்திருத்தங்களில் உள்ள ஒரு விசயத்தை தவறாக வழிநடத்தும் அரசியல் ரீதியாக அனாதைகளான குழுக்கள் சமூகத்தை தவறாக வழிநடத்துகிறார்கள் . ஏனெனில் அத்தகைய கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அவர்கள் மீண்டும் அரசியலுக்கு வரமுடியாது. பிரதமர் ஹரினி அமரசூரிய மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் பாசாங்கு மற்றும் பொறாமை அடிப்படையாகக் கொண்டது என்றும் அவர் தெரிவித்தார்.

 பெளத்த மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் ஹின்தும சுனில் செனவி  இங்கு கருத்துத் தெரிவிக்கையில், கல்வி தொகுதிகள் பற்றி எதுவும் தெரியாத பெற்றோர்களையும் மற்றவர்களையும் தவறாக வழிநடாத்தி நடத்தப்படும் போராட்டங்கள் அடிப்படையற்றவை  என்று கூறினார். ஒரு ஆசிரியராக செய்ய வேண்டிய கல்வி மாற்றங்கள் குறித்தும் நான் அறிந்திருப்பதாகவும் என்ன சதி  வந்தாலும் புதிய கல்வி சீர்திருத்தங்கள் சரிய அனுமதிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.

கலந்துரையாடலில் பேசிய இலங்கை பிக்கு பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் வணக்கத்துக்குரிய கலாநிதி பனமுரே சந்திம தேரர் தற்போதைய அரசாங்கம் கல்வி சீர்திருத்தங்களில் விசேட கவனம் செலுத்தியுள்ளது. எனவே ஒரு புத்தகத்தில் ஒரு வார்த்தையை பயன்படுத்தி இறையாண்மை அறிக்கைகளை வெளியிடுவது தவறு . தற்போதைய கல்வி முறை படையாற்றலை நசுக்குகிறது. சுயநலம் மற்றும் காட்டுமிராண்டித்தனத்தால் வளப்படுத்தப்படும் ஒரு சமூகத்தை வளர்க்கிறது. எனவே புதிய கல்வி சீர்திருத்தத்தை எதிர்ப்பது ஒரு கொடூரமான செயல் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மகா சங்கத்தினர் பாராளுமன்ற உறுப்பினர்களான பி.டி.என்.கே.பலிஹேன , சுமந்த நவரத்ன , திலின சமரகோன் , அதிபர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *