சென்னையில் நடைபெற்ற சர்வதேச கதை சொல்லும் போட்டியில் திருமலை ஆயிஷா ஸஹ்ரினுக்கு விருது
தமிழக அரசின் ஏற்பாட்டில் சென்னையில் நடை பெறும் இரு நாள் அயலக தமிழர் தினம் மாநாட்டினை முன்னிட்டு உலகலாவிய ரீதியில் நடத்தப்பட்ட சர்வதேச கதை சொல்லும் போட்டியில் இரண்டாம் இடத்தினை இலங்கையின் திருகோணமாலை த/ கிண்ணிா மகளிர் கல்லுாரி ( தேசிய பாடசாலை) 8 வயது மாணவி முஹ்ஸின் ஆயிஷா ஸஹ்ரின் பெற்றுக்கொண்டார்.
அவருக்கான விருதினையும், பணப்பரிசலையும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (2026.01.11) சென்னை வர்த்தக மைய மாநாட்டு மண்டபத்தில் நடை பெற்ற அயலக தமிழர் தினத்தின் ஆரம்ப விழாவில் போது வழங்கி வைத்தார்.
இதன் போது தமிழக சிறுபான்மை நலன் மற்றும் புலம் பெயர் தமிழர் நலன் அமைச்சர் ச.மு நாசர்,மற்றும் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.ராதகிருஷ்ணண் உள்ளிட்டவர்களும் பிரசன்னமாகியிருந்தை படத்தில் காணலாம்.
(படமும்,தகவலும் – சென்னையில் இருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா)
