இன்றைய வானிலை முன்னறிவிப்பு
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது இன்று (10) அதிகாலை 4.00 மணியளவில் திருகோணமலையிலிருந்து வடகிழக்கு திசையில் சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து இன்று அதிகாலை 5:30 மணியளவில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக (Depression) வலுவிழந்து, இன்றைய பகல் வேளையில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இலங்கைக் கடற்கரையூடாகக் கடந்து செல்ல அதிக வாய்ப்புள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளது.
