புத்தளம் வடக்கு கோட்டத்தின் புதிய பணிப்பாளராக ஏ.எஸ்.நஸ்லியா பதவியேற்பு
புத்தளம் வடக்கு கோட்டத்தின் புதிய பணிப்பாளராக, உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி ஏ.எஸ்.நஸ்லியா வியாழனன்று (08) காலை தனது பதவியினை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் 10 வருடங்கள் வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி , வலயக்கல்விப்பணிமனைக்கு இடமாற்றம் பெற்றுள்ள பிரதி கல்விப்பணிப்பாளர் திருமதி ஏ.அஸ்கா, வலயக்கல்விப்பணிமனையின் பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள், உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், அயற் பாடசாலை அதிபர்கள், கல்வி சாரா ஊழியர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
10 வருடங்கள் பணியாற்றிய பணிப்பாளர் ஏ. அஸ்காவின் சேவைகள் நினைவு கூறப்பட்டு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டதோடு , புதிய பணிப்பாளருக்கு வாழ்த்துக்களும் வழங்கப்பட்டன.



(கற்பிட்டி செய்தியாளர் சியாஜ்)
