சில மாவட்டங்களுக்கு வெள்ளப் பெருக்கு அபாயம்
ஊவா,கிழக்கு,மத்திய, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள ஆற்றுப் படுகைகளில் அடுத்த 24 மணிநேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அநுராதபுரம், திருகோணமலை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப் பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு நீர்ப்பாசனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
