உள்நாடு

மக்கள் காலடிக்கு சென்று மக்களின் பிரச்சினைக்கு தீர்வு

கிராமம் தோறும் மக்களோடு மக்களாக” எனும் தொனிப்பொருளில் மக்கள் காலடிக்கு சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றை தீர்க்கும் செயற்பாட்டின் அடிப்படையில் அட்டாளைச்சேனை 08 (கோணாவத்தை) பிரதேச மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பான மக்கள் சந்திப்பு நிகழ்வு கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் தலைமையில் இன்று (04.01.2026) நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களான அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் அமைப்பாளர் றியா மசூர், ஏ.எல்.பாயிஸ், கட்சியின் அட்டாளைச்சேனை 08 ம் பிரிவு அமைப்பாளர் எஸ்.ஐ.றியாஸ், அந்-நூர் மகா வித்தியாலய அதிபர் என்.கே.எம்.மிஸ்வர், அட்டாளைச்சேனை 08ம் பிரிவு கிராம சேவகர் எம்.அஸ்லம் சஜா மற்றும் அட்டாளைச்சேனை 08 ம் பிரிவு கிளைக்குழு தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், விளையாட்டு கழக வீரர்கள், கோணாவத்தை பிரதேச பள்ளிவாசல் நிருவாக சபையினர் மற்றும் முக்கியஸ்தர்கள், மீனவர்களும் கலந்து கொண்டனர்

கே எ ஹமீட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *