உள்நாடு

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பேரிடரால் 183 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் 459,726 குடும்பங்களைச் சேர்ந்த 1,600,469 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 22,050 குடும்பங்களைச் சேர்ந்த 71,472 பேர் இன்னும் 739 தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பேரிடர்களால் 6,193 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *