வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் பராமரிப்புக்கு உதவிய கடற்படை சுழியோடிகள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம் வழங்குவதற்காக கடற்படை நாடுமுழுவதும் ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
இதன் கீழ், ஊவா மாகாண நீர் வழங்கல் வாரியத்தின் கீழ் உள்ள மஹியங்கனை நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மத்திய மாகாண நீர் வழங்கல் வாரியத்தின் னகீழ்உள்ள பேராதெனிய கட்டம்பே நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றில் வெள்ளத்தால் சேதமடைந்து செயலிழந்த நீர் பம்புகளை பழுதுபார்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் கடற்படை சுழியோடி உதவியை வழங்கியது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் வேண்டுகோளுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட இந்த சுழியோடி உதவி நடவடிக்கையில் ஐந்து (05) கடற்படை வீரர்களைக் கொண்ட இரண்டு சுழியோடி குழுக்கள் பங்கேற்றன.
அதன்படி, கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக நீருக்கடியில் நீர் பம்பின் செயல்பாட்டிற்கு இடையூறாக இருந்த மஹியங்கனை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குவிந்திருந்த சேறு மற்றும் பிற குப்பைகள் மிகுந்த முயற்சியுடன் அகற்றப்பட்டு அதன் அசல் நிலைக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
