உள்நாடு

மகாவலி கங்கை நீர்மட்டம் திடீரென உயர்வு..! மாவில்லாறு நீர்த்தேக்கம் மற்றும் சுரங்கத்தினை சூழவுள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது..!

மகாவலி கங்கையின் நீர்மட்டம் எதிர்பாராத அளவு உயர்வடைந்துள்ளது. இதனால் மாவில்லாறு தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு பாதுகாப்பான இடத்துக்கு நகருமாறும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இந்த எச்சரிக்கையை நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் அஜித் குணசேகர பொதுமக்களின் நலன் கருதி அவசரமாக விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மகாவலி கங்கையின் நீரோட்டம் அதிகரித்துள்ள காரணத்தினால் மாவில்லாறு நீர்த்தேக்கம் மற்றும் சுரங்கத்தின் சூழல் உள்ள மக்களுக்கு இந்த அவசர எச்சரிக்கை விடுக்கப்படுகிறது

(பவாஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *