உள்நாடு

புத்தளத்தில் சட்டவிரோத கொண்டு வரப்பட்ட 699 கிலோகிராம் பீடி இலைகளை கைப்பற்றிய கடற்படை

இலங்கை கடற்படையினர், புத்தளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (25) நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு போக்குவரத்துக்கு தயார் நிலையில் வைத்திருந்த சுமார் அறுநூற்று தொண்ணூற்றொன்பது (699) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் ஒரு (01) கெப் வண்டியுடன் இரண்டு (02) சந்தேக நபர்களைக் கடற்படையினர் கைப்பற்றினர்.

கடல் வழிகள் ஊடாக கடத்தல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்க்கரைகளை உள்ளடக்கி கடற்படை வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி புத்தளம் நகரில் நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான கெப் வண்டியொன்று (01) சோதனை செய்யப்பட்டது. சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு போக்குவரத்துக்கு தயார் நிலையில் வைத்திருந்த சுமார் அறுநூற்று தொண்ணூற்றொன்பது (699) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் ஒரு (01) கெப் வண்டியுடன் இரண்டு (02) சந்தேக நபர்களைக் கடற்படையினர் கைப்பற்றினர்.

மேலும், இந்த நடவடிக்கைகளின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு (02) சந்தேக நபர்கள், பீடி இலைகள் மற்றும் கெப் வண்டி (01) ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *