சீரற்ற வானிலை; ஜனாதிபதி தலைமையில் அவசர கூட்டம்
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தலைமையிலான அவசர கூட்டமொன்று தற்போது இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கூட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், நிலைமையை சீர்செய்வதற்காக முன்ஏற்பாடுகள், பொலிஸாரின் செயற்பாடு தொடர்பிலும் கலந்துரையாடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
