உலகம்

பங்களாதேஷ் நிலநடுக்கத்தில் இதுவரையில் 6 பேர் பலி

பங்களாதேஷில் இன்று(21)  வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில் 06 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5.5 ரிச்டர் அளவில் பதிவான நிலநடுக்கமானது தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் 25 கிலோமீற்றர்  தொலைவில் உள்ள கோரஷால் பகுதியில்  மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 06 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *