ஹொரவப்பொத்தானை விபத்தில் சஹீல் அஹமத் பலி
திருகோணமலை, ஹொரவப்பொத்தானை பிரதான வீதியில் 10 மைல் கல் பகுதியில் (13) இடம்பெற்ற விபத்தில் இளைஞனொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மஹதிவுல்வெவ பகுதியில் இருந்து தம்பலகாமம் நோக்கி ஆடை தொழிலுக்கு சென்ற பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இளைஞன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் கபுகொல்லேவ ஆனவிழுந்தான் பகுதியைச்
சேர்ந்த எஹியா உல்முதீன் சஹீல் அஹமட் எனும்19 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )
