உள்நாடு

தெதுறு ஓயாவில் நீடாடச் சென்று பலியானோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு

சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன. 

10 பேர் கொண்ட குழுவொன்று கிரிபத்கொடையில் இருந்து சிலாபம் – முன்னேஸ்வரத்திற்கு நேற்று (5) சுற்றுலா சென்றுள்ளனர். 

அவர்கள் சிலாபத்தில் உள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்றிருந்த நிலையில், அவர்களில் 5 பேர் காணாமல் போயிருந்தனர். 

முன்னதாக காணாமல் போனவர்களில் ஒருவர் மாத்திரமே பாதுகாப்பாக மீட்கப்பட்டு சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். 

எவ்வாறாயினும் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *