உள்நாடு

திங்கள், புதன் கிழமைகளில் முஸ்லிம் திணைக்கள பொது மக்கள் தினம்

முஸ்லிம் சமய மற்றும் கலாசார பண்பாட்டு திணைக்களம் பொது மக்களுக்கு மிகச்சிறந்த வினைத்திறன்மிக்க சேவைகளைப் பெற்றுக் கொள்வதனை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் பிரகாரம் பொதுமக்கள் சேவை தினங்களாக வார நாட்களில் திங்கட்கிழமை மற்றும் புதன் கிழமைகளை பிரகடனப்படுத்தியுள்ளதுடன் அன்றைய தினம் காலை 8 .30 மணி முதல் பிற்பகல் 4.15 மணிவரை மாத்திரம் திணைக்களத்திற்கு வருகை தருமாறு அறிவித்துள்ளது.

முஸ்லிம் சமய மற்றும் கலாசார பண்பாட்டு திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக்கொள்ள வருகை தரும் பொது மக்கள், அங்கு அசெளகரியங்களை எதிர்கொள்வதை தவிர்க்கும் நோக்கிலும் அவர்களுக்கு மிகச்சிறந்த வினைத்திறன்மிக்க சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையிலுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *