மாவனல்லை பேருந்து தரிப்பிடம் தற்காலிகமாக இன்றிலிருந்து மூடப்படும்; நீண்ட காலத்துக்குப் பின் புனரமைக்க நடவடிக்கை
“வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற கொள்கைக் கூற்றின்படி, சபரகமுவ மாகாண சபையின் நிதி ஒதுக்கீடுகளுடன், மாவனெல்ல பேருந்து நிலையப் பகுதியைப் புதுப்பிக்கும் பணிகள் 2025 நவம்பர் 3 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.
அபிவிருத்தி நடவடிக்கைகள் நடைபெறும் காலங்களில் மாவனெல்ல பேருந்து நிலையம் மூடப்படுவதால், உங்கள் பயண சிரமத்தைக் குறைக்க பேருந்துகள் பின்வரும் இடங்களில் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளன.
- அளுத் நுவர மாகடவரல மஹன்தேகம வழி பேருந்துகள் – லங்கா வங்கிக்கு அருகில்
- அரநாயக்க பாதை பேருந்துகள் – அத்துக்கோரல பேக்கரிக்கு முன்னால்
- ஹெம்மாதகம பாதை பேருந்துகள் – ஹெம்மாதகம சாலையின் முதல் பகுதியில்
- கேகாலை வேகன்தலே மற்றும் அத்தனகொட நோக்கிச் செல்லும் பேருந்துகள் – பஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள பாதையில்
- ரம்புக்கனை பாதையில் செல்லும் பேருந்துகள் – ரம்புக்கனை பாதையின் இருபுறமும்
நிர்வாக பொறியாளர் – ரம்புக்கனை
