உள்நாடு

இன்றிரவு முதல் ஜுமாதுல் ஊலா மாதம் ஆரம்பம்

ஹிஜ்ரி 1447 ஜூமாதுல் ஊலா மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்று ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிறைக் குழு தலைவர் மெளலவி எம்.பி.எம். ஹிஷாம் அல் பத்தாஹி தலைமையில் இடம்பெற்ற இடம்பெற்றது.

இதன்போது நாட்டில் எப்பாகத்திலும் பிறை தென்படாத காரணத்தினால் ரபிஉனில் ஆகிர் மாதத்தை இன்று வியாழக்கிழமை ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி 30 ஆக பூர்த்தி செய்து இன்று மாலை (23) மஹ்ரிபு தொழுகையைத் தொடர்ந்து ஜூமாதுல் ஊலா மாதம் ஆரம்பமாவதாக பிறைக் குழுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.

கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிறை பார்க்கும் மாநாட்டில் பெரிய பள்ளிவாசலின் தலைவர் தாஹிர் ரசீன் உள்ளிட்ட பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், பிறைக் குழு உறுப்பினர்கள் , அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை பிரதி நிதி அஷ் ஷெய்க் மௌலவி ரிழா உள்ளிட்ட உலமா சபை உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள வக்பு பிரிவு பொறுப்பாளர் ஏ.எஸ்.எம்.ஜாவித், மற்றும் ஏனைய பள்ளி வாசல்கள், ஸாவியாக்கள் தரீக்காக்களின் பிரதிநிதிகள், மேமன் சங்க பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *