உள்நாடு

முந்தல் புளிச்சாக்குளத்தில் இறால் தண்ணீர் தொட்டியில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

முந்தல் புளிச்சாக்குளம் இறால் பண்ணையில் தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டியில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (19) முந்தல், புளிச்சாக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.இறந்தவர் வவுனியா, விஸ்வமடு பகுதியைச் சேர்ந்த வசந்தம் தர்ஷன் (வயது 24) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முந்தல், புளிச்சாக்குளம் பகுதியில் உள்ள இறால் பண்ணையில் பணிபுரிந்து வந்த உயிரிழந்த குறித்த நபர் வலிப்பு நோயாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.. இறால் பண்ணையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது திடீரென தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டியில் விழுந்துள்ள நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

பண்ணையில் இருந்த மற்றவர்கள் அவரை சிகிச்சைக்காக முந்தல் மருத்துவமனையில் அனுமதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனைக்காக சிலாபம் பொது மருத்துவமனைக்கு உடல் அனுப்பப்பட்டது டன் மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *