கிராமம் தோறும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு
கிராமம் தோறும் மக்களோடு மக்களாக” எனும் தொனிப்பொருளில் மக்கள் காலடிக்கு சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றை தீர்க்கும் செயற்பாட்டின் அடிப்படையில் தைக்காநகர் பிரதேச மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பான மக்கள் சந்திப்பு நிகழ்வு நேற்று முன்தினம் (18.10.2025) நடைபெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கட்சியின் பிரதித் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ், அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.நஜீஹா முஸபீர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் எஸ்.ஐ.றியாஸ், அஸ்-சஹ்ரா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எல்.அஜ்மல், அதிபர் ஏ.எல்.யாசீன் , பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் எம்.ஏ.அன்சார்(Rtd.Pr), ஐ.எல்.நசீர்(Ex.MPS), வேட்பாளர் ஏ.எல்.நயீம், தொழிலதிபர் ஏ.கே.அமீர் மற்றும் தைக்காநகர் பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது, பின்வரும் விடயங்கள் தைக்காநகர் மக்களால் முன்வைக்கப்பட்டன.
- தைக்கா நகர் ஸஹ்றா வித்தியாலயத்தில் நிலவுகின்ற ஆளணி தட்டுப்பாடுகள், வகுப்பறை கட்டடங்கள், தளபாடங்களுக்கான தட்டுப்பாடு, பாடசாலை விளையாட்டு மைதான அபிவிருத்தி.
- தைக்கா நகர் ஜும்மா பள்ளிவாசலுக்கான அபிவிருத்தி , பள்ளிவாசலுக்கான சோலார் இணைப்பு.
- தைக்கா நகர் வட்டாரத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த கூடிய வகையில் பல் தேவைக்கட்டிடத்தில் தொழிற்சாலை ஒன்றை அமைத்தல்.
- தைக்கா நகர் பிரதேசத்திற்கான பொது நூல் நிலையம் ஒன்றை RDS கட்டத்தில் அமைத்தல்.
- தைக்கா நகர் பிரதேசத்தில் அக்கரைப்பற்று – கல்முனை வீதியில் 02 பஸ் தரிப்பு நிலையங்களை அமைத்தல்
- தைக்கா நகர் பிரதேசத்தில் கிராமிய வீதிகள் வடிகான்கள் அமைத்தல், வெள்ள நீர் வடிந்தோடக்கூடிய செயற்பாடுகளை மேற்கொள்லல்
- தைக்கா நகர் பிரதான வீதியில் மீன் விற்பனை செய்வதற்கான இடம் ஒன்றை ஆரம்பித்தல்.
- தைக்கா நகர் முகத்துவார பிரதேசத்தை உல்லாசத்துறை இடமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளல்.
- முகத்துவார பகுதியில் அமைந்துள்ள மாடுகளறுக்கும் மடுவத்தினை மக்கள் வாழும் இடத்தை விட்டு அகற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளல்.
இத்தேவைகளை பாராளுமன்ற உறுப்பினர்கள், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர், அக்கரைப்பற்று மாநகர சபை மேயர், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் மற்றும் ஏனைய திணைக்கள தலைவர்களும் இணைந்து நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.





(கே. எ. ஹமீட்)