நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு
நாடளாவிய ரீதியில் பெய்து வரும் கன மழை காரணமாக இராஜாங்கனை , அங்கமுவ மற்றும் கலாவெவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் ஆறு அடிக்கு திறந்து விடப்பட்டு 8,352 கன அடி நீரும், அங்கமுவ நீர்த்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகள் நான்கு அடிக்கு திறக்கப்பட்டு 2,442 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் கலாவெவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இரண்டு அடி உயரத்தில் திறக்கப்பட்டுள்ளதாகவும் நீர் மேலாண்மை முகாமைத்துவ பணிப்பாளர் எச்.எம்.பி.எஸ்.ரீ.ஹேரத் தெரிவித்தார்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)