உள்நாடு

கெடுதிகளை நீக்கி, நலவுகளை மோலோங்கச் செய்து, ஞான ஒளியை பிரகாசிக்கச் செய்வோம்; எதிர்கட்சித் தலைவரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

கெடுதிகளை நீக்கி, நலவுகளை மோலோங்கச் செய்து, ஞான ஒளியை பிரகாசிக்கச் செய்வதையே நாம் இந்த தீபாவளி தினத்தன்று ஆற்ற வேண்டும்.

கெடுதியான அம்சங்களை விடுத்து நல்லடைவுகளை நாம் ஒளியாக சமூகமயப்படுத்த வேண்டும். நாம் வென்ற நன்மைகளை சமூகத்திற்குக் கொண்டு செல்வதே தீபாவளி நமக்கு கற்பிக்கும் பாடமாகும்.

இந்த தீபாவளி கொண்டாடத்தில், நல்லதொரு சமூகத்தின் இருப்புக்காக வேண்டி, சமூகத்தைப் பொய்யிலிருந்து உண்மையின் பக்கமும், அறியாமையிலிருந்து அறிவியலின் பக்கமும் கொண்டு வரும் ஒளியாக திகழும் வேலைத்திட்டமொன்றின் பால் அர்ப்பணிப்பது குறித்து நாம் அதிக அக்கறை கொள்ள வேண்டும். என தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *