பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் அன்ட்ரூ பட்ரிக் பேருவளை நகர சபைக்கு வருகை
இலங்கைக்கான ஐக்கிய இராச்சியத்தின் மாண்புமிகு உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பாட்ரிக், 2025 அக்டோபர் 16 ஆம் திகதி
பேருவளை நகர சபைக்கு அதிகாரப்பூர்வமாக விஜயம் செய்தார். பேருவளை நகர பிதா மபாஸிம் அஸாஹிர் தலைமையில் நகர சபை உறுப்பினர்கள் அன்புடன் அவரை வரவேற்றனர்.
இவ்வருகை, இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றுக்கிடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தியது.
எதிர்காலத்தில் நகர சபையுடன் இணைந்து சமூக முன்னேற்றம் மற்றும் நிலைத்த நகர வளர்ச்சிக்கான முயற்சிகளில் ஈடுபடுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இன்ஸாப் பாக்கிர் மாக்கார் மற்றும் நகர சபை உறுப்பினர்களான ஸெய்யிட் அஹமட், மல்லிகா ஜயந்தி ஸில்வா, எம்.என்.எம். இர்சாத், எம்.எப்.எம். இசாம் ஆகியோரும் இதன்போது கலந்து கொண்டனர்.



(பேருவளை பீ.எம். முக்தார்)