சீனா செல்லும் ஹரிணி..!
2025ஆம் ஆண்டுக்கான பெண்கள் குறித்த உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (11) இரவு சீனாவுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
‘ஒரு பகிரப்பட்ட எதிர்காலம் பெண்களின் முழுமையான வளரச்சிக்கான புதிய மற்றும் துரிதப்படுத்தப்பட்ட செயல்முறை’ எனும் கருப்பொருளின் கீழ் பிஜிங்கில் இக் கூட்டம் நடைபெறவுள்ளது.
சீன அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் பெண்கள் அபிவிருத்தி அமைப்பும் இணைந்து இக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.
இந்த விஜயத்தின் போது, பிரதமர் அமரசூரிய ஒரு முக்கிய உரையை நிகழ்த்துவதோடு, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன பிரதமர் லி கியாங் ஆகியோருடன் பல உயர்மட்ட இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீன அரசின் அழைப்பிற்கிணங்க பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று 12ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது அவர் ஐக்கிய நாடுகளின் மகளிர் மாநாடு ஏற்பாடு செய்யும் பெண்கள் தொடர்பிலான உலக தலைவர்கள் மாநாட்டிலும் கலந்துகொள்வார்.
அத்துடன் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உட்பட பிரதமர் லீ ச்சயங் ஆகியோரையும் பிரதமர் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.