உள்நாடு

விபத்தில் ஒருவர் பலி; சாரதி கைது

மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (08/10/2025) புதன்கிழமை காலை கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த கார் தூக்கம் காரணமாக வீதியை விட்டு விலகி வீதியோரமாக பயணித்தவர் மீது மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் ஓட்டமாவடி-01, பதியுதீன் மஹ்மூத் வீதியைச்சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சீனி முகம்மது முகம்மது இப்றாஹீம் (வயது – 63) என்பவர் மரணமடைந்துள்ளார்.

வாகனச்சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *