உள்நாடு

ஆசிரியர் தினத்தில் கல்வியலாளர்களுக்கு மகுடம் சூட்டிய மீஸான் பௌண்டஷன்; கட்சிப் பிரமுகர்கள் பலரும் பங்கெடுப்பு

கடந்த 20 வருடங்களாக சாதனையாளர்களை பாராட்டிக் கௌரவித்து வரும் அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா, அதன் தொடர்ச்சியாக சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலய ஆசிரியர்கள் கௌரவிப்பும், சாதாரண தர மாணவிகளுக்கான பாராட்டும் நிகழ்வான “Constellations Awards – 2025” கௌரவிப்பு நிகழ்வும் ஆசிரியர் தினமான நேற்று முன்தினம் (06) திங்கட்கிழமை மாளிகைக்காடு வாவா றோயலி மண்டபத்தில் நடாத்தியது.

கல்முனை அல்- அஸ்ஹர் வித்தியாலய அதிபர் ஏ.எச். அலி அக்பரின் நெறிப்படுத்தலில் அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளரும், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு பணிப்பாளர் சபை முன்னாள் உறுப்பினருமான யூ.எல். நூருல் ஹுதா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேசிய காங்கிரஸ் தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வருமான ஏ.எல்.எம். அதாஉல்லா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாசித், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.ஏ. அப்துல் ரஸாக் (ஜவாத்), கல்முனை கல்வி வலய நிர்வாக பிரதிக்கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர், ஓய்வுபெற்ற பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார் ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர் தின சிறப்புரை நிகழ்த்தினர்.

மேலும் இந்நிகழ்வில், அல் அஸ்ஹர் வித்தியாலய பிரதி அதிபர் எஸ்.எம்.எஸ். ரிசானா, உதவி அதிபர்களான திருமதி ஏ.பி.என். ஜஸீல், எம்.எச்.ஐ. இஸ்ஸத், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் ஆளுநர் சபை உறுப்பினர்கள், நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள், மாணவிகள் என பலரும் கலந்து கொண்டதுடன் கடந்த சாதாரண தரப் பரீட்சையில் சிறப்பு சித்தியெய்திய மாணவிகள், ஆசிரியர்கள், கல்வியலாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *