உள்நாடு

புத்தளம், கற்பிட்டி பகுதிகளை உள்ளடக்கிய 07 கடற்கரை பூங்காக்கள் நிறுவத் திட்டம்

நாடு முழுவதும் 100 சிறிய கடற்கரை பூங்காக்களை நிறுவும் திட்டத்திற்கு ஏற்ப புத்தளம் மாவட்டத்தில் 07 கடற்கரை பூங்காக்களை நிறுவ கடலோர பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் முதல் சிறிய கடற்கரை பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழா மாரவில – குருசா தேவாலயத்திற்கு அருகில் சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தலைமையில் நடைபெற்றது.

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கயான் ஜனக, ஹிருணி விஜேசிங்க, மற்றும் நாட்டாண்டியா பிரதேச சபைத் தலைவர் சாகர விஜேசேகர ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

புத்தளம் மாவட்டத்தில் மாரவில, சிலாபம், புத்தளம் மற்றும் கற்பிட்டி பகுதிகளில் 07 கடற்கரை பூங்காக்கள் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்து செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *