மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்
இன்று (04) மாலை இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் நிலவுவதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இன்றைய வானிலை முன்னறிவிப்பை வெளியிடும் போது திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
எனவே, பலத்த மழை, பலத்த காற்று மற்றும் பலத்த மின்னல் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இன்று பிற்பகல் 1 மணிக்குப் பிறகு தீவின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.