உலகம்

இந்​தியா – சீனா இடையே 5 ஆண்​டு​களுக்கு பிறகு மீண்​டும் நேரடி விமான சேவை அக்​டோபர் 26-ம் தேதி முதல் தொடக்கம்..!

இந்​தியா – சீனா இடையே 5 ஆண்​டு​களுக்கு பிறகு மீண்​டும் நேரடி விமான சேவை அக்​டோபர் 26-ம் தேதி முதல் தொடங்​கப்​படு​கிறது.

கடந்த 2020-ம் ஆண்டு கரோனா பெருந்​தொற்று காலத்​தில் இந்​தியா – சீனா இடையே விமான சேவை ரத்து செய்​யப்​பட்​டது. அதே ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்​கின் கல்​வான் பள்​ளத்​தாக்​கில் இந்​தியா – சீனா ராணுவ வீரர்​கள் இடையே மிகப்​பெரிய மோதல் ஏற்​பட்​டது. இதில் இந்​திய தரப்​பில் 20 வீரர்​கள், சீன தரப்​பில் 45 பேர் உயி​ரிழந்​தனர்.இதன்​காரண​மாக, இரு நாடு​கள் இடையி​லான உறவில் மிகப்​பெரிய விரிசல் ஏற்​பட்​டது.

கொரோனா பெருந்​தொற்​றுக்கு பிறகு உலகம் முழு​வதும் விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்​பியது. ஆனால், இந்​தியா – சீனா இடையே மீண்​டும் நேரடி விமான சேவை தொடங்​கப்​பட​வில்​லை. சர்​வ​தேச அரங்​கில் இரு நாடு​களும் எதிரும் புதிரு​மாக செயல்​பட்டு வந்​தன. கடந்த மே மாதம் இந்​தியா – பாகிஸ்​தான் இடையே 4 நாட்​கள் போர் நடை​பெற்​றது. அப்​போது​கூட பாகிஸ்​தானுக்கு ராணுவரீ​தி​யாக சீனா பல்​வேறு உதவி​களை செய்​தது.

இந்த நிலை​யில், அமெரிக்​கா​வின் வரி​வி​திப்பு நடவடிக்கை சர்​வ​தேச அளவில் பல மாற்​றங்​களை ஏற்​படுத்​தி​யது. ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தாக குற்​றம்​சாட்டி இந்​திய இறக்​குமதி பொருட்​களுக்கு 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விதித்​தார். அமெரிக்​கா​வின் புதிய வரி விகிதம் கடந்த ஆகஸ்ட் மாதம் அமலுக்கு வந்​தது.

இந்த சூழலில் இந்திய ஜனாதிபதி திர​வுபதி முர்​முவுக்கு சீன அதிபர் ஜி ஜின்​பிங் சமீபத்​தில் ரகசிய கடிதம் ஒன்றை அனுப்​பி​யிருந்​தார். அதில், ‘சர்​வ​தேச விவ​காரங்​களில் இந்​தி​யா​வும், சீனா​வும் ஒருங்​கிணைந்து செயல்பட வேண்​டும். எல்​லை​யில் அமை​தியை ஏற்​படுத்த வேண்​டும். அமெரிக்​கா​வின் வரி​வி​திப்பு போரை தடுத்து நிறுத்த வேண்​டும்’ என்று அழைப்பு விடுத்​திருந்​தார்.

மேலும், ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் உச்சி மாநாட்​டில் பங்​கேற்​கு​மாறு பிரதமர் மோடிக்கு சீன அதிபர் சிறப்பு அழைப்பு விடுத்​தார். இதை ஏற்​றுக்​கொண்ட பிரதமர் மோடி, கடந்த ஆகஸ்ட் இறு​தி​யில் சீனா​வின் தியான்​ஜின் நகரில் நடை​பெற்ற ஷாங்​காய் உச்சி மாநாட்​டில் பங்​கேற்​றார். அப்​போது பேசிய மோடி, “இந்​தி​யா​வும் சீனா​வும் கூட்​டாளி​கள்தான், எதிரி​கள் அல்ல” என்று கூறினார். இதே கருத்தை சீன அதிபர் ஜி ஜின்​பிங்​கும் வழிமொழிந்​தார்.

உச்சி மாநாட்​டின் ஒரு பகு​தி​யாக பிரதமர் மோடி​யும், அதிபர் ஜி ஜின்​பிங்​கும் விரி​வான பேச்​சு​வார்த்தை நடத்​தினர். அப்​போது மீண்​டும் நேரடி விமான சேவையை தொடங்​க​ முடிவு செய்​யப்​பட்​டது. அதன்​படி, மேற்கு வங்​கத் தலைநகர் கொல்​கத்தா – சீனா​வின் குவாங்சூ நகரங்​களுக்கு இடையே நேரடி விமான சேவை அக்​. 26-ம் தேதி தொடங்க உள்​ளது.

‘இரு நாடு​களின் விமான போக்​கு​வரத்து துறை அதி​காரி​கள் சமீபத்​தில் முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்​தினர். இதில் எட்​டப்​பட்ட முடி​வின்​படி, அக்​டோபர் இறு​தி​யில் இரு நாடு​கள் இடையே நேரடி விமான சேவை தொடங்​கப்​படு​கிறது’ என்று மத்​திய வெளி​யுறவுத் துறை தெரிவித்துள்​ளது.

மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: கொரோனா பெருந்​தொற்று காலத்​துக்கு முன்​பாக இந்​தியா – சீனா இடையே மாதம்​தோறும் 539 நேரடி விமான சேவை​கள் இயக்​கப்​பட்டு வந்​தன. ஏர் இந்​தி​யா, சீனா சதர்ன் ஏர்​லைன்​ஸ், சீனா ஈஸ்​டர்ன் ஏர்​லைன்ஸ் நிறு​வனங்​கள் பயணி​கள், சரக்கு விமானங்​களை இயக்​கின. இதன்​மூலம் மாதம்​தோறும் இரு நாடு​களை சேர்ந்த 1.25 லட்​சம் பேர் விமான பயணம் மேற்​கொண்​டனர்.

கொரோனா காலத்​தில் விமான சேவை தற்​காலிக​மாக நிறுத்​தப்​பட்​டது. இதன்​பிறகு, சீனா செல்ல வேண்​டிய இந்​திய விமான பயணி​கள் வங்​கதேசம், ஹாங்​காங், தாய்​லாந்​து, சிங்​கப்​பூர் வழி​யாக சீன நகரங்​களுக்கு சென்​றனர். சீன அதிபர் ஜி ஜின்​பிங்​கின் கடிதம் காரண​மாக இந்​தி​யா, சீன உறவில் புதிய அத்​தி​யா​யம் தொடங்​கி​யுள்​ளது. படிப்​படி​யாக டெல்​லி, மும்பை உள்​ளிட்ட நகரங்​களில் இருந்​தும் சீன நகரங்​களுக்கு விமான சேவை தொடங்​கப்​படும். இதே​போல சீன தலைநகர் பெய்​ஜிங், அந்த நாட்​டின் வர்த்தக தலைநகர் ஷாங்​காய் உள்​ளிட்ட நகரங்​களில் இருந்து இந்​தி​யா​வுக்கு விமான சேவை​கள் தொடங்​கப்​படும். தற்​போது டெல்​லி​யில் இருந்து வேறு நாடு​கள் வழி​யாக பெய்​ஜிங் செல்ல ரூ.20,000 வி​மான கட்​ட​ணம் வசூலிக்​கப்​படு​கிறது. நேரடி வி​மான சேவை தொடங்​கப்​படு​வ​தால் இந்த கட்​ட​ணம் 20 சதவீதம் வரை குறை​யும்​. பயண நேர​மும்​ குறை​யும்

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *